உனக்காக காத்திருந்து காத்திருந்த
என் காலங்களை மட்டும் தான் நீ
களவு கொள்ளலாம் ,,,,,,,,,,
கரைவது என்னவோ உன்னோடு
சேர்ந்துவிட்ட என் எதிர் காலங்களும் தான் ,,,
நீ மட்டும் என் வாழ்வில் வந்திருக்காவிட்டால்
எனது பாதைகள் தடம் மாறி போய்இருக்கும்
கால்களுக்கு தடம் போட்டவளே
நினைவிருக்கிறதா,,,,,,,,,,,,?
காய்த்திருக்கும் கனிச்சோலை என்றல்லவா
காலமெல்லாம் காத்திருந்தேன்
கனிகள் தந்ததென்னவோ நிஜம் தான்
கடைசியில் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
பட்டுவிட்ட சோலை என்றா
பனியாய் கூட படர மறந்தாய்
நிஜம் தானே
எப்படி பனியாய் ,,,,,,,,,,,,,
சூரியனின் கதிர்களினால் சுட்டொளிந்து போவாயே,,,
வற்றாத கங்கை என வரவிருக்கிராயோ ,,,,
வசந்தங்கள் பாடி உன்னை வரவேற்றுக் காத்திருப்பேன்
வரும் நாளை எண்ணி எண்ணி
வாசல் தோறும் பூ விரிப்பேன்
பூக்களுக்கேனும் ஒரு முத்தம்மிடு
உன் புன்சிரிப்பை பார்த்தேனும் எனைப்பார்த்து அவை சிரிக்க ,,,,,,,,,