தண்ணுமை பறை அடிச்சாச்சு
சிறு பட்சி கூட்டமே .....
நீவீர் இட்ட முட்டைகளை வேறிடம் சேர்ப்பீர் ....
விசைக்கருவி அல்ல
இந்த வில்லும் அம்பும்
இப்போது இது இசைக்கருவி ....
யாழ் மீட்டும் பாணன் பாரீர்
பெரும் பறை கேட்க போறீர்
சிறு பட்சி கூட்டமே .....
உம்மை விடைகொள்ள சொல்லியும்
வரும் மாதர் கருதறுக்க வினை கொள்ளச்சொல்லியும் ....
சிறு பட்சி கூட்டமே
எங்கள் கால்கள்
நாளை காலை உங்கள் இருப்பிடத்தை அழிக்கப்போகிறது
நீங்கள் வேறிடம் செல்வீர்
சிறு பட்சி கூட்டமே .......
------இசை கொண்டு வாழ்ந்த இனம் நாங்கள்
ஈ எறும்பு சிறு குருவி
இதுவும் எங்கள் சொந்தம் என்றோம் -----
கடைசி வரை சொல்லலையே
ஏன் உலக நாடே ?
நம் காதவழி தூரம் தான்
என்தமிழ் நாடே ?
பதுங்கத்தான் பதுங்குகுழி .....
இதிலும் பகுத்தறிவா ?