ஞாயிறு, பிப்ரவரி 26, 2012

என்ன செய்ய

மனிதாபிமானம் மரணித்த ஒரு நாள் 
ஒரு தாய் 
ஒரு ஆண் பிள்ளை ஒரு பெண் பிள்ளை 
பையனின் உடம்பில் ஓட்டுத்துனியும் இல்லை 
நள்ளிரவு 12 கடந்துவிட்டது 

எனது கடைக்குள்ளே அடைக்கலமாய் 

என்ன செய்ய 

வாடிக்கையாளர்களை சீக்கிரமாய் வெளியேற்றிவிட்டு 
கதவை அடைதுக்கொள்கிறேன் 
ஒருவருக்கும் வார்த்தை இல்லை 

என்னுடைய சட்டையை பையனுக்கு கழற்றி கொடுக்கிறேன் 

தாய்ப்பாசம்  

அவன் தாய்க்கு 

தன் ஆடை தருகிறாள் தாய் அவனுக்கு 

எதுவும் கேட்கவில்லை  எவரிடமும் 

தொலைபேசி தருகிறேன் அவர்களிடம் 

நீண்ட உரையாடல் 

விடை பெறும் நேரம் இருவருக்கும் கண்ணீர் 
பையன் கும்பிட்டு விடை சொன்னான்  

நண்பனின் வாகனத்தில் அனுப்பி வைத்தேன் 

சிறிது நேரம் சென்று ஒரு அழைப்பு 
பிரிதொருவரிடம் இருந்து 
எங்கட வீட்ட 
வந்து விட்டார்கள் 

கணவன் மனைவியை ............... 
புரிந்து கொள்ளுங்கள் 

ஒட்டு மொத என் உறவே 

நீங்கள் தாலி என்ற ஒன்றை 
கட்டிவிட்டதால் 

மனைவியும் பிள்ளைகளும் உங்கள் அடிமைகள் இல்லை 

அப்போதும் கூட அந்த இளம் தாய் கேட்கிறாள் 
தயவுசெய்து polise  இற்கு போன் செய்ய வேண்டாம் எண்டு 

என் இனமே 
உங்கள் குடிக்கும் போதைப் பழக்கத்திற்கும் 
பெண்கள் என்ன பகடை சோழியா? 


பின்பு கேள்விப்பட்டேன் 
நான்கே மாதங்கள் தானாம் 
பிரான்ஸ் வந்து .....

நடு வீதியில் அநாதரவாக நின்றவர்களை ....
பிரெஞ்சு கொஞ்சம் கூட தெரியாதவர்களை ...
பக்கத்தில ஒரு தமிழ் கட இருக்கு எண்டு 

சைகை மூலம் யாரோ சொல்லி 
இங்கே வந்தார்களாம் 

14 வருடங்கள் கணவனை பிரிந்து  
கனவுகள் சுமந்து 
வெளிநாடு என்று சொல்லி .....

என்ன வாழ்க்கை இது 

ஒன்று சொல்கிறேன் 
உறவுகளே 

இங்கே 

அனேகமாக 
மனிதம் செத்து
நாளாகிவிட்டது 

எனது சொந்த கருத்தை இப்போது பதிவு செய்ய விரும்புகிறேன் 

எம்மில் அநேகர் 
குடிக்கும் போதைப்பளக்கத்திட்கும் அடிமைகளாகி 
இழந்தது பணத்தை மட்டும் அல்ல 

ஆண்மையும் தான் 

எங்கே தன்னால் இயலவில்லையே என்று 
மனைவி இன்னொருவனுடன் போய்விடுவாளோ என்று  
கற்பனைகளுக்கு ஒரு உருவம் கொடுத்து 
காடு மிராண்டி ஆகிறான் 

நிறைய மருத்துவங்கள் வந்தாகிவிட்டது 
மனிதனாக வாழ எண்ணம் கொண்டால் 
மருத்துவ மனை செல்லுங்கள் 

மதம் கொள்ளாதீர்கள் 

செக்ஸ் என்பது மூடி மறைக்க வேண்டிய ஒன்று அல்ல 
இந்த உலகத்திலே எல்லா உயிர்க்கும் இயற்கைஆனது 

வாழ்க்கையை வாழுங்கள் 

வியாழன், பிப்ரவரி 09, 2012

பொறுத்திரு

உலக நாடுகளே 
ஒரு தரமேனும் திரும்பி பார்ப்பாயா 
பெரும் வலியோடு எழுதும் வரிகள் இவை 
உங்களுக்கு தான் வார்தைகளிலையே 
செவிகளுமில்லையே அன்றெங்கள் ஓலங்கள் கேட்க

உலகில் எந்த நாடெனும் கலவரம் கொண்டால் 
கால் பதிக்க துடிக்கும் U N ஏ 
நாங்கள் கூண்டோடு அழிய 
வேடிக்கை பார்த்தாய் 
கொடியவனுக்கோ கோபுரமானாய்

பொறுத்திரு 

மானுடம் வாழ ஒண்ணா 
மாலை தீவிற்கே 
மாற்று அரசியல் கண்டாயே 

இப்போது சொல்ல்கிறேன் கேள் 

கடாரம் வென்றவனடா என் தாத்தன்

காழ்புணர்ச்சி தானே உனக்கு 
விட்டால் உன்னை விஞ்சிடுவாநென்று   

மாயன் கலண்டரை தூக்கி எறி
மானுடம் வாழ வகுத்தவர் நாமே 

குமரிக்கண்டத்தோடு தொலைந்தது 
ஓலைச்சுவடிகளோடு நம் ஒரு தொகுதி சொந்தமுந்தாம்  

இன்றும் வாழ்கிறார் 
உங்களால் மறுக்கப்படுபவர்களாய் 

ஆஸ்திரேலியா விலே கிழக்கு அமெரிக்கா விலே 

ஈழத்தவனை மட்டும் தான் நீ அளிக்க முடியவில்லை 

அண்டவனடா நாங்கள்
உங்களையும் என்களின்கீழ் அன்றொருநாள்  

ஆண்ட பரம்பரை மீண்டும் ஒரு முறை
 ஆழத்த்துடிப்பதில்  என்ன குறை 
தோண்டிப் புதைத்தவர் மீண்டெழும் நாள் வரும் 
உரத்துச் சொல்லுவோம் உறுதி உரை