வெள்ளி, ஜனவரி 18, 2013

கொடு முடி ஒறு

இறந்த பிறகு எனதுடலுக்குமொரு பெயருண்டு.........
புகளுடலென்று...

அது இகழா அன்றி மகிழா ?

இயைந்திணைந்து வந்த போதும் 
இதுவரைக்கும் இசைந்ததில்லை 
இதுவெதுவோ அட 
அது இது தான் 

வாழும் போது யார்க்குமில்லை 
போனபின்நெதட்கு.......... கௌரவங்கள் 

பாரதியும் பண்பட்டான் 
பார்ப்பனரால் புண்பட்டான் 
ஆனபோதும் மரிக்கயிலே மானிடத்தில் 
நிலைத்துவிட்டான் 

கலந்துவிட்டோம் 
கவலையின்றி செறிந்துவிட்டோம் 
தனித்துவத்தை தழைக்க சொன்ன 
மனிதங்களை கொன்றே விட்டோம் 

குனிந்து குனிந்தே கூன் விழுந்த என்னினமே 
நீ 
அடிமை கொள்வது 
அடுத்தவனை அல்ல 

உன்னிலும் கீழானவனை 
ஏதோ ஒன்றில் இழந்தவனை 

அடுத்தவன் உன்னை அடக்கி ஆள்கையில் 
அரிதாரங்களில் ஆழுமை இல்லை 

எதிர்த்தவன் எவனெனும் இடுமொழி வேண்டாம் 
கொடு முடி ஒறு உன் இறு திமிர் எடு 

வெள்ளி, ஜனவரி 11, 2013

மண்டியிட தோணும்

ஏதாவதொன்றை எழுத தொடங்கையில்,,, 
எதுகையின்  மோனையின்  கலவியின் வீழ்படிவாய் ,,,

எனை நானே தேடுகின்றேன்  
உன்னில் எனை தொலைத்தபின்னும் 
அது இல்லை என்று ஆனா பின்னும் 

இப்போதும் நம்பிக்கை இல்லை 
வெற்றுச் சிலைகளின் மேல் 

இருந்தும் அந்த மாயக் கண்ணனை ஏதோ மண்டியிட தோணும் 
நீ சொல்லி செல்லாததைஎல்லாம் கீதை  வழி சொன்னதனால் 

இங்கெதுவும் நிரந்தரமில்லை