ஜென்மங்கள் மீதெனக்கு நம்பிக்கை..
இது நாள் வரை...
இப்போது ...
மீட்டிப்பார்க்கிறேன்...
வீணையை அல்ல.... நான் தொலைத்த என் "தீ " யை..
எப்படி என்னால் மட்டும் உடல் வாழ முடிகிறது ...?
இப்போதும் சுயநலவாதி தான் நான்...
சுமைகளை எல்லாம் உன்மீதே பத்திரப் படுத்துகிறேன்
என் உடல் சுமந்த வழிகளை எல்லாம் நானே சுமக்கிறேன்
உன்னோடு கலந்த உயிர்.... அதுவேனும் வாழட்டும்