வெள்ளி, ஜனவரி 27, 2012

நான் தொலைத்த என் "தீ "

இல்லவே இல்லை..
ஜென்மங்கள் மீதெனக்கு  நம்பிக்கை..
இது நாள் வரை... 

இப்போது ...

மீட்டிப்பார்க்கிறேன்...
வீணையை அல்ல.... நான் தொலைத்த என் "தீ " யை..

எப்படி என்னால் மட்டும்  உடல் வாழ முடிகிறது ...?

இப்போதும் சுயநலவாதி  தான் நான்...
சுமைகளை எல்லாம் உன்மீதே பத்திரப் படுத்துகிறேன் 

என் உடல் சுமந்த வழிகளை எல்லாம் நானே சுமக்கிறேன் 
உன்னோடு கலந்த உயிர்.... அதுவேனும் வாழட்டும்  

இரங்கல் உரை ..

மோகத்தின் முதல் வித்து காதலிலே உருவாச்சு 
கை கூடி வரும் போது தூய்மை என்று பெயராச்சு  

சுற்றம் கூடி முடித்து வைத்தால் சுவர்க்கம் என்று பிதற்றுகிறார் 
சொந்தமாக முடிவெடுத்தால் ஊர் கூடி தூற்றுகிறார் 

இரு மனங்கள் இணைவது தான் திருமணமாம் உளறுகிறார்
 சாதி விட்டு சாதி மனம் இணையக் கண்டால் ஏசுகிறார் 

மனங்கள் ஓன்று  சேர்வதற்கு உடல்கள் ரெண்டு கூட்டணியா?
மலர்களையே சேர்த்து வைக்கும் வண்டுகள் போல் மாற்றணியா?

காதலுக்குள் மறைத்து வைத்த காமம் ஓர் நாள் கேள்வி கேட்கும் 
அது கூட காதல் என்ற போர்வையிலே மறைந்து வாடும் (வாழும்)

முகமூடி என்னினமே ,,,,,,,
இப்போதேனும் விழித்துக்கொள் 

ஜலதரங்கம் பாடுமட்டும் நீ ரசித்தல் அலையின் திரை......
ஆழிப் பேர் அலையாய் வந்தால் யார்க்குமில்லை இரங்கல் உரை ..

சனி, ஜனவரி 14, 2012

நண்பா உனக்கு

norway இல் வாழும் நண்பா 
வணக்கம் 

எதுவென்று தெரியாதா காலத்தே 
காதல் என்று சொன்ன 
எந்தன் காதலியாய் நீ நினைத்த 
ஒருத்தி 
சந்தோசமாய் இருக்க 
எதாவது செய் என்று சொன்னாய் 

நன்றி 

உன்னை என் நண்பன் என்று நினைத்து 
பெருமை கொள்கிறேன் 

எப்படி உனக்கு சொல்வது ...

என்னால் ஒருத்தி 
எல்லாம் இருந்தும் 
இல்லாமல் போனாள் என்று ...

செவ்வாய், ஜனவரி 03, 2012

நலமோடு நீ வாழ்க ..........

அழகான பூ ஓன்று பூமியிலே 
பிறந்தின்று ஆகிறது அகவை ... 

கடவுள்கள் மேல் துளியும் இல்லை நம்பிக்கை 
அவளுக்காக போயிருந்தேன் 
வெறும் கற்சிலையில் கண்டிருந்தேன் 
என் பொற்கொடியின் புன்னகையை 

வார்த்தைகளால் வாழ்த்துகிறேன் 
வாழ்கையிலும் காத்திருக்கேன் 

உன் பெயர் போல சுடர் கொண்டு 
நலமோடு நீ வாழ்க ..........