வியாழன், டிசம்பர் 13, 2012

ஊமையாய் அழுகிறது!


நான் மரண வாசலில் நிற்கும் நேரம்!
இறுதியாக என் நினைவுகள் திரையில் அவளுடன் வாழந்த வாழ்க்கையெலாம் ஒடிக் கொண்டிருக்கிறது!

அவளை முதன் முதலில் பார்த்த என் மடிக்கணனி எனக்காக மௌன அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறது!

அவளுடன் நான் பேசிய முதல் வார்த்தை என்ன
ிடம் ஊமையாய் அழுகிறது!

அவளுக்காக நான் எழுதிய கவிதை புத்தகம் என் நினைவுகளின் கண்ணீரில் அழிந்துக் கொண்டிருக்கிறது!

உன் விழிகளில் நான் வாழ்ந்த நாட்கள் எல்லாம்!
என் இரவை இழந்த நாட்கள்!
இனி உன் விழியில் வாழவும் வழி(லி) இல்லை! இனி இரவை இழக்கப் போவதும் இல்லை!

நான் போகும் சேதி அவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை! இருப்பினும் என் விழிகள் என் வீட்டு வாசலை நோக்கி!

வந்தாளா இல்லை வருவாளா? என்பது தெரியாமலே  போகிறது என் உயிர்!

என் புறப்பாடு ஆரம்பமானது!
போகும் வழியெலாம் என் விழிகளின் பரிதவிப்பு!

என் ஆன்மா தேடித் தேடி அலைந்த்தது  தான் மிச்சம்!

கல்லறையில் புதைந்தேன்!
அய்யோ இங்கேயும் அவளின் நினைவுகளா?

உன் நினைவுகளை அழிக்கத் தானடி நான் இங்கே விதைந்தேன் ஆனால் இங்கேயும்  உன் நினைவுகள்  என் கல்லறையை நிரப்பி விடுகிறது

அடுத்த ஜென்மத்தில் உன் இதயமாக பிறந்து விடுகிறேன்!
ஒன்றாய் சேர்ந்து வாழ்வோம்,,,, இறப்போம்!

வயதான பின்பும் முதல் காதல் என்றும் இளமையாகத்  தான் இருக்கும்!

கண்ணீர் கவிதை

பல ருடங்கள் கழித்து நண்பர்கள் ஒன்று கூடும் நாள்!
அனைவரும் சந்தோஷத்தில் திளைக்க ஒர் இதயத்தின் கண்ணீர் கவிதை இது!

வாழ்க்கை  முடியும் முன்பு கண்டிப்பாக வருவேன் என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டாள்!

மீண்டும் அவளைப் பார்க்கும் தருனம் இன்று தான் தூ
ரத்தில் அவள்!,

பார்த்த கணத்தில் என் கண்கள் கண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது!
அன்று அவளைப் பார்க்க நான் தவித்த தவிப்புகள் இன்றும் என் கண்களில்!

அன்றை விட இன்று இன்னும் அழகாகத் தான் இருக்கிறாள் விழிகளில் அதே விழி ஈர்ப்பு விசையோடு!

அவளும் நானும் உரையாடிய skype இப்போதும்  காத்துக் கொண்டிருக்கிறது எங்களுக்காக "ஏ சீக்கிரம் வாடி" என்று மீண்டும் கூற ஆசை தான் எனக்கும்!

நான் அவளை அழைத்துச் செல்ல சொன்ன இடங்கள் எல்லாம் மீண்டும் கேட்கிறது எப்பொழுது  வருவீர்கள் என்று?!
நான் என்ன பதில் சொல்வேனடி!

எனக்காக நீ எழுதிய கடிதங்கள்  எல்லாம் இன்றும் பத்திரமாகத் தான் இருக்கிறது!
அதை காதல் முறிவுக்கான ஒப்பந்தம் என்று எடுத்துக் கொள்ளவா?
பதில் சொல்லடி!

அன்று தவறாக வரைந்த வரிகளை   அழித்தாய்!
என் நினைவுகளில் உன்னை அழிக்க வழிச் சொல்லடி?!
என் காதலியே!

அவள் நெருங்க நெருங்க உதிரம் உறைகிறது !
என் செல்கள் சிதிலமடைகிறது!

வேண்டாமடி பெண்ணே உன் கனவனை அழைத்துக் கொண்டு இங்கிருந்து சென்று விடு!
என் கண்ணீர் சொல்லி விடப் போகிறது நான் உன் மீது கொண்ட காதலினய்!

நீ திருமணமானாலும் என் காதலியே!

ஞாயிறு, டிசம்பர் 02, 2012

தனதடி திரு ஒறு

குல சாமிகளைக் கொன்று விட்டோம் 
கருங்கற்களை  தொழ  துணிந்தோம் ,,,,

வேலும் வாழும் காட்சிப்பொருளாய் 
வெற்றுடல் சுமந்தோம் ஈனப்பிறப்பாய் ,,,

எழுகதிருடன் எழு எமை எதிர்ப்பவன் விழ 
தனதடி திரு ஒறு கரும்புலி என எழு ,,,,