வியாழன், டிசம்பர் 15, 2011

பிரிவு


பிரிவுகள் தான் 
அன்பின் ஆழத்தை 
அளக்கும் கருவியாமே 

பார்த்தாயா 
சின்னப் பிரிவுக்குள் நீ 
சிதைந்து போனதை 

இது 
உனக்கு மட்டுமல்ல 
எனக்கும் சேர்த்துத்தான் 
சொல்கிறேன் 

இப்போது புரிகிறதா 
என் மீது நீ கொண்ட நேசமும் 
உன் மெது நான் கொண்ட நேசமும் 
எவ்வளவு ஆழமானதென்று 

இதுவும் ஒரு காதல் பானம்

அவள் இதயத்தில் கவிதைகள் எழுதி கலைத்துவிட்ட காரணத்தால் 
தெம்பாக இப்போது காதல் பானம் குடிக்கின்றேன் 

காதல் பானம் தலைக்கு ஏறிவிட்ட  நாட்களெல்லாம் 
அவளைக் காண வேண்டும் என்று துடிக்கிறேன் 

காதல் ஈரம் கொண்ட கால்களுடன் இன்று  
அவளுடன் ஒரு நடை பயணம் 

பயணங்கள் புதுமை தான் 

இதை எல்லாம் எண்ணி  இப்போது நான் இருக்கும் தனிமை 
பெருங்கொடுமை 

திங்கள், டிசம்பர் 12, 2011

வார்த்தை தந்த வலி


நான் எழுதுவதெல்லாம்  
உனக்க்கெனத்தெரிந்தும்
உன்னிடம் இருந்து மட்டும் 
இதுவரை பதில் இல்லை 

உன்னை எழுதுவதைத் தவிர 
எனக்கு வேறு வார்த்தையும் இல்லை 

வெறும் வார்தைகளால்த்தானே  
உன்னை காயப்படுத்தினேன் 

இப்போதைய இந்த வார்த்தைகளாவது 
காயமாற்றுமா அன்றி கனத்தைக்கூட்டுமா 

காயங்கள் உண்மையெனில் 
ஆற்றுதலும் சாத்தியமே 

உயிர்த்துடிப்பு


உனக்காக எழுதித் தீர்த்த எத்தனையோ 
காகிதங்கள் மை கொட்டித்  துடிக்கிறது 

உன்னை எழுதிவைத்த உயிர்க்கூடு அதைப்பார்த்து 
கை கொட்டிச் சிரிக்கிறது 

ஓன்று வாசிப்பதற்காக 
இன்னொன்று யாசிப்பதற்காக !

நினைவெல்லாம் உன் நினைவு

இப்போதெல்லாம் 
இயல்பாக தும்மல் வந்தால் கூட 
நீயே என்னை நினைப்பதாய் உணர்கிறேன் 

அதை ரசிக்கவும் செய்கிறேன் 

எப்போதாவதெனில் சரி 

எப்போதுமே தும்மிக்கொண்டிருக்க 
எப்படி உன்னால் முடிகிறது ?

வெள்ளி, டிசம்பர் 02, 2011

மீண்டும் ஒரு வயது
 வரவு வைக்கப்படுகிறது 
காலனின் கணக்கில் 
எப்படி அவனுக்குத் தெரியும் 
நான் சீக்கிரமே வர இருப்பது